Month: June 2025

மின்சார கட்டண திருத்தம் இன்று

மின்சார கட்டண திருத்தம் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்கு அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒவ்வொரு நுகர்வோர் வகைக்கும் ஏற்ப கட்டண திருத்தம் மாறுபடும் என்று ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார…

வெல்லம்பிட்டியில் தனியார் பஸ் விபத்து – 9 பேர் காயம்

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இன்று (11) காலை வெல்லம்பிட்டியவில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், பேருந்தில் பயணித்த ஒன்பது பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (11) காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (12) காலை 5:30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,…

கல்வி அமைச்சு சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு

பாடசாலை வளாக்கத்தில் டெங்கு நுளம்பு பெருகினால் அதற்கு தலைமை ஆசிரியரை பொறுப்பேற்க கூறி கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு, அதிபர் தர அதிகாரிகள் சங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. குறித்த சுற்றறிக்கை காரணமாக 15 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…

வாகன விபத்தில் ஒருவர் பலி – பஸ் சாரதி கைது

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே…

ஹெட்டிபொலவில் கணவன் தாக்கியதில் மனைவி பலி

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் தாக்குதலால் உயிரிழந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, ஹெட்டிபொல பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹதுபிட்டிய, உடவெலவத்தையைச் சேர்ந்த…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்…

மலேசியாவில் பஸ் விபத்து – 15 மாணவர்கள் பலி!

மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பஸ் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பேராக் மாநிலத்தில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் பஸ்ஸில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. பேராக் மாநிலத்தையும் கிளந்தான் மாநிலத்தையும் இணைக்கும்…

இன்று மீண்டும் கூடவுள்ளது தேசபந்து தொடர்பான விசாரணைக்குழு

தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (09) மீண்டும் கூடவுள்ளது. அதன்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள் தொடர்பாக பிரதிவாதி தரப்பின் நிலைப்பாடு இன்று முன்வைக்கப்பட உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சமீபத்தில்…

சி.ஐ.டியில் ஆஜரானார் கம்மன்பில

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜரானார்.சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.