அமைச்சுப் பதவி அவசியமில்லை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிறைவேற்றுவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து தான் வேலை செய்யவில்லை எனவும், அவ்வாறான எதிர்ப்பார்ப்பு என்றும் எனக்கு இருந்ததில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற வளாகத்திற்கு வந்திருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மதிப்பளிப்பதாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு சிறிதளவேனும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டடோமென்றும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *