யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்கள், “தற்போது முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்கு வர வேண்டும். சிகிச்சை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் நோய் தீவிரமாகுவதையும் இறப்பையும் தடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *