
ஹிடோகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது ஹிடோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகம்பலகம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கட்டுகம்பலகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாகியையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹிடோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.