திருடர்களைப் பிடிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இதுவரை பிடித்த திருடர்கள் ஒருவருமில்லை. எனினும் மக்களுக்கு உயிர்வாழ முடியாதளவுக்கு அவர்களில் வயிற்றிழடித்துள்ளனர். மக்கள் அடுத்து வேளை உணவை உண்ண முடியாதளவுக்கு வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.நெலும்மாவத்தையிலுள்ள கட்சி தலைமைய கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் அடுத்த வேளை உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறைந்த பட்சம் இந்நாட்டில் தேங்காய் சம்பல் சோறும் சாப்பிட்டு உயிர்வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையின் படி இன்று 400 கிராம் உப்பு 300 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. தேங்காயொன்று 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோகிராம் அரிசி அதிக பட்ச விலைக்கு விற்கப்படுகிறது.

அதேபோன்று மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளன.அதன்படி கெரட் ஒரு கிலோ ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோன்று போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் 400 முதல் 500இற்கும் அதிகமாக காணப்படுகிறது.

இதன்படி பார்க்கையில் தற்போது மக்களை உண்ண உணவின்றி செய்த அரசாங்கமாகவே தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் காணப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் திருடர்களை பிடிக்கிறோம் என்ற போர்வையில் ஏமாற்று வித்தை காட்டி அதிகரித்து செல்லும் வாழ்க்கைச் செலவை மூடி மறைக்கப்பார்க்கிறது.கடந்த வாரங்களில் இந்த அரசாங்கம் செய்ததொன்றுமில்லை.

அந்தவகையில் “கெரம்போர்ட்” பகிர்ந்தளித்து சிறைக்குச் சென்ற மஹிந்தானந்த மற்றும் நளினின் தயவால் உயிர்வாழ்ந்தனர்.

நாங்கள் பார்த்தளவில் அவர்கள் இருவரையும் சிறைக்கு அனுப்பியது பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்ததால் அல்ல.

அவ்வரிப்பணத்தில் கிராமங்களிலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு கரம் மற்றும் டாம் போட்களை பகிர்ந்தளித்தமையாலேயே.

இது சட்டத்துக்குட்பட்டு பிழையென்றால் பிழையே. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.

எனினும், திருடர்களை பிடிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இதுவரை பிடித்த திருடர்கள் ஒருவருமில்லை. எனினும் மக்களுக்கு உயிர்வாழ முடியாதளவுக்கு அவர்களில் வயிற்றிழடித்துள்ளது.

மக்கள் அடுத்த வேளை உணவை உண்ண முடியாதளவுக்கு வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளது. என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *