
தெஹிவளை ரயில் பாதையை கடக்க முயன்ற தம்பதியினர், கொழும்பு கோட்டையிலிருந்து அலுத்கமை வரை சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (04) மாலை நேரத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் பதுளை, பதுளபிட்டிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஆண் மற்றும் 59 வயதுடைய பெண்ணாகும்.
இவர்களின் உடல்கள் களுபோவில வைத்தியசாலையின்பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.