சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (5) ஆரம்பித்த வேலைநிறுத்தத்தை நாளையும் தொடரப்போவதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

துணை மருத்துவ பட்டதாரிகளின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் எழுந்துள்ள சிக்கல்கள் உட்பட ஐந்து பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று காலை 8 மணிக்கு வேலைநிறுத்தம் ஆரம்பித்தது.

இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை மற்றும் மத்திய இரத்த வங்கி உள்ளிட்ட சிறப்பு நிறுவனங்களில் வேலைநிறுத்தம் நடைபெறவில்லை.

மருத்துவமனைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சை சேவைகள் செயல்படுத்தப்படுவதாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, வாக்குறுதியளித்தபடி பொருத்தமான கலந்துரையாடலை வழங்காததால், இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *