மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இன்று (11) காலை வெல்லம்பிட்டியவில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், பேருந்தில் பயணித்த ஒன்பது பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மீத்தோட்டமுல்ல சந்திக்கும் இடையில் வீதியோரத்தில் மூன்று லொறிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இன்று அதிகாலையில் அதிவேகமாக வந்த பயணிகள் பேருந்து, நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மற்ற மூன்று வாகனங்களும் மோதியதில் நான்கு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *