Month: April 2025

மகிந்தவின் மனைவி மீது சி.ஐ.டியில் முறைப்பாடு

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிலத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச(shiranthi-rajapaksa) சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். ஷிரந்தி ராஜபக்ச குறித்த நிலத்தை…

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்: நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி

22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றையதினம் (10) மாத்திரம் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி 24…

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்த பரீட்சார்த்த திட்டம்…

மீண்டும் நீதிமன்றில் தேசபந்து..

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) இன்றையதினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதன்படி, மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் இன்று காலை அழைத்து வரப்பட்டுள்ளார். வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய பொலிஸ் அதிகாரி கைது

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றையதினம் (08) இரவு குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் காவல் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 நவம்பரில்…

13 வேட்பாளர்கள் கைது

மார்ச் 3 ஆம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 13 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், 42 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் 11 வாகனங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (08) காலை…

நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த மாநாடு நாளை…

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 40,000 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன என்ற வெளிப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகளை வழங்குவதில்…

பாடசாலை விடுமுறை குறித்து வௌியான அறிவிப்பு

முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை மறுதினம் (11) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பித்து மே 9 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.