
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (23) மாலை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தாக்குதலில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 7 பெண்களில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், எஞ்சிய பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி .ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்..