ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் இலங்கையில் உள்ள சீன தூதரகத்தில் இருந்து அவருக்கு சீனாவுக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *