இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்க தலைவர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டார்.

“நாம் நீண்ட கால தீர்விற்கு செல்ல வேண்டும், இல்லை என்றால், மீண்டும் மீண்டும் இந்த நெருக்கடிக்கு செல்லலாம்.

சிறு போகத்தில் நெல் கொள்முதல் செய்ய, நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த நெருக்கடியை தீர்க்க முறையான திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

மேலும், அரசாங்கம் குறுகிய கால தீர்வாக வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யாவிட்டால், இந்த நிலையில் சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *