
விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,விவசாய நிலத்தை தயார் செய்வதற்காக பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் அளவு மற்றும் அழுத்தத்தில் உள்ள விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை குறித்து அனைத்தும் தற்போது மதிப்பீடு செய்யப்படுகின்றன.
அதன்படி, சேதமடைந்த விளை நிலங்களுக்கு விவசாயிகளுக்கு ஹெக்டேயருக்கு ஒரு இலட்சம் ரூபா முழு இழப்பீடு வழங்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற வகையில் அந்த கடமையையும் பொறுப்பையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
நெற்பயிர்கள் சுமார் ஒரு அடி, இரண்டு அடி, ஒன்றரை அடிக்கு கீழ் மணல் அடுக்குகளால் நிரப்பப்பட்டுள்ளன. அதற்கு இயந்திரங்களின் உதவியை எடுக்க வேண்டும்.
அந்த பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், அந்த விளைநிலங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளோம்.
தற்போதுள்ள சுற்றறிக்கைகளைப் பற்றி சிந்திக்காமல் புரிந்துணர்வுடன் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.