இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (20) முடிவடையவிருந்தது.

தனியார் நிறுவனங்களால் சுமார் 35,600 மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதாக நேற்று (19) அறிவித்திருந்த போதும் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்யவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *