கல்னேவ பிரதேசத்தில் பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (01) இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்னேவ பொலிஸ் குற்றப்பிரிவில் பணியாற்றும் அதிகாரியொருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் ஆவர்.

கல்னேவ நகரில் புல் வெட்டும் இயந்திரத்தை பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிக்கு விற்பனை செய்வது தொடர்பில் வியாபாரியிடமிருந்து 30 ஆயிரம் ரூபா பெற முயன்றபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *