உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் கோருதல் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 336 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணை மற்றும் உதவித் தேர்தல் ஆணையர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *