பாராளுமன்றம் இன்று (08) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் தவறான நடத்தை மற்றும் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை அறிவிக்கப்பட உள்ளது.இது விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இன்று பிற்பகல் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான மசோதாவும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *