
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இதன்படி, இந்த மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
வருடத்தின் இதுவரையான நாட்களில் 820,000 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு நாட்டுக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்திலேயே 1 மில்லியனைத் தாண்டியது.
எனினும், இந்த வருடம் முதல் நான்கு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.