2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் நேற்று(16) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, அவர்கள் மீது சுமத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து, கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, வழக்கு கோப்பை மறுஆய்வு செய்த பின்னர், 2025 ஏப்ரல் 9 அன்று சட்டமா அதிபர், குறித்த 12 பேருக்கும் எதிராக மேலும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்த அறிவுறுத்தல்களின் பேரிலேயே, பன்னிரண்டு பேரையும் விடுவிக்க அரசு தரப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *