நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு-வெல்லவாய வீதியில் வெலியாராவில் இன்று (24) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ரிப்பர் லொறியின் பின்புறத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

யக்கல-கிரிந்திவெல வீதியில் வாரபலானையில் பஸ் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

இதற்கிடையில், ஏறாவூர்-பு ன்னக்குடா வீதியில் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர்மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், நுவரெலியாவின் டொப்பாஸில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருநாகல் கிரிவவுல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *