
உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விவரங்கள் குறித்த திகதிக்குப் பிறகு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும், பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடருவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.