கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. இன்றும் பல மாவட்டங்களில் அதிககனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மழையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கேரளாவின் 10 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கேரளாவில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது.

இதனால் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *