இடைநீக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு, இன்று (16) முதல் விசாரணை முடியும் வரை தினசரி கூடுவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி, இடைநீக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்றும் குழுவின் முன் ஆஜரானார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் இ.டபிள்யூ.எம். லலித் ஏகநாயக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தக் குழு ஏற்கனவே பல தடவைகள் கூடி, தேசபந்து தென்னகோன் உட்பட பலரிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளது.

குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *