
சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு மோசடி செய்ததாக ஹல்துமுல்ல பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று (28) பிற்பகல் பலாங்கொடை நகரில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, வங்கியில் இருந்து முன்பணத் தொகையைப் பெற்றுக்கொண்டு பணத்தை மோசடி செய்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பலாங்கொடையைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் ஹல்துமுல்ல, சமனலவேவ, கேகாலை மற்றும் கண்டி போன்ற பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் 2 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் செய்த பிற மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.