களுத்துறை, மொரந்துடுவவைச் சேர்ந்த 10 வயது குழந்தையென்று மொரகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரியகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று (30) மாலை சென்றிருந்த வேளையில், அங்குள்ள ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து, குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *