
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இரு வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை அறலகங்வில பொலிஸ் பிரிவின் கஜுவத்த மற்றும் சீகிரிய பொலிஸ் பிரிவின் இலுக்வல பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன், உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர்.
42, 44 வயதுடைய அறலகங்வில கஜுவத்த மற்றும் சீகிரிய இலுக்வல பகுதிகளை வசிப்பிடமாக கொண்ட இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேக நபர்களை அதிரடிப்படையினர் அறலகங்வில மற்றும் சீகிரிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்