
70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஸ்வர்ண நாட்டு அரிசி இவ்வாறு இறக்குமதி செய்யப்பட உள்ளது.டிசம்பர் 15ம் திகதிக்கு முன், சந்தைக்கு அரிசி வழங்கும் பணியை மேற்கொள்ளவுள்ளதுடன், அரிசியை இறக்குமதி செய்யும் போது வரி குறைப்பு இருக்காது என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.