
கல்விப்பொதுத் தராதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாளை (25) முதல் நடைபெறவுள்ள பரீட்சைக்காக 06 நாட்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் இன்று பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.