ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவத்தையடுத்து இந்த பரீட்சையை மீண்டும் நடாத்துவது பொருத்தமற்றது என அமைச்சர்கள் சபை பரிந்துரைத்துள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் சட்டமா அதிபர் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான மேலதிக விசாரணையை டிசம்பர் 11ஆம் திகதி நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *