தெற்கு அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயிலுக்கும் குருகஹா துஹெதெகெம நுழைவாயிலுக்கும் இடையில் இன்று (4) காலை மரக்கறி ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் வீதி முற்றாகத் தடைப்பட்டு வீதி சேதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையிலிருந்து மரக்கறி ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லொறியின் பின்னால் வந்த கொள்கலன் பெட்டியை ஏற்றிச் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதில், முன்னால் சென்ற மரக்கறி லொறி வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

. விபத்துடன் கொழும்பு நோக்கிய பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களை ஹதெக்ம நுழைவாயிலில் இருந்து வெளியேறி சாதாரண வீதியூடாக வெலிப்பன்ன நுழைவாயிலுக்குத் திரும்பி அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையுமாறும் அறிவுறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *