இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.இந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் ஊக்குவிப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடையாளம் காணப்பட்ட தொழுநோயாளிகளில், கொழும்பு மாவட்டத்தில் 115இற்கும் அதிகளவானோர் பதிவாகியுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் 113 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த வருடத்தில் சுமார் 1500 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் பணிப்பாளர் நிருபா பல்லேவத்த தெரிவித்தார்.

இதேவேளை, நோய்க்கு சிகிச்சை பெறும் போது தேவையற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஆய்வக சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *