தேர்தல்களின்போது தடுப்புக்காவல் கைதிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை தேர்தல் ஆணைக்குழுவும் சிறைச்சாலைகள் திணைக்கள மும் ஆராய்ந்து வருவதாகசட்ட மா அதிபர் நேற்று (05) உயர்நீதிமன்றத்துக் குத் தெரிவித்தார்.

கைதிகள் தேர்தலில் வாக்களிப்பதற்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பைத் தயாரிக்க தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி, முன்னாள் கைதி சுதேஷ் நந்திமால் டி சில்வா தாக்கல்செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

சட்ட மா அதிபரின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டபோது சட்ட மா அதிபரின் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி லக்ஷன் டயஸ், இதுவரை சுமார் 66 நாடுகள் தங்களின் கைதிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளதை நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்து சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் கைதிகளுக்கு அந்த உரிமை வழங்கப் பட வேண்டும் என்ற அவதானிப்புகளை சமர்ப்பித்துள் ளதாகக் கூறினார்.

ோது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, கைதிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் கீழ் தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த கடமைப்பட்டிருந்தாலும் சிறையில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டிய அரச சட்டத்தரணி இந்தக் காரணத்துக்காகவே, பல நாடுகள் கைதிகளுக்கு அந்த உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தற்போது வரையப்பட்டு வரும் புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் சிறப்பு வாக்களிப்பு நிலையங்களை நிறுவ முன்மொழியப் பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைக ளில் இந்த வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், கைதிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பது குறித்து தேர்தல் ஆணை யமும் சிறைச்சாலைகள் துறையும் ஆய்வு செய்து வருவதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரங்களின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க ஆறு மாத கால அவகாசம் அளிக்குமாறு அரச சட்டத்தரணி மேலும் நீதிமன்றத்தைக் கோரினார்.கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாக தனது கட்சிக்காரர் ஆய்வுகள் நடத்தியதாகவும் அது தொடர்பான அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் பெவ்ரல் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதியரசர்கள், மனுவை ஓகஸ்ட் 28ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர்.

அன்றைய தினம் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்துக்குத் தெரிவிக்குமாறு அரச சட்டவாதிக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *