
வென்னப்புவ தெற்கு வைக்கால் பகுதியிலுள்ள வீடொன்றில் இளம் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது. காதல் உறவு காரணமாக ஏற்பட்ட குடும்பத் தகராறிலேயே இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாரவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.