
பண்டிகைக் காலத்தில் வாகனங்களை செலுத்தும்போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு, போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் சாரதிகளை கேட்டுக்கொள்கிறது.
மேலும், புத்தாண்டு காலத்தில் பாதுகாப்புக்காக சுமார் 35,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.