ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், நேற்று (16) இரவு அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பஸ்ஸுடன் மோதியதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மூன்று பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும் அதிவேகமாக முச்சக்கர வண்டியை சாரதி செலுத்திய போது, எதிர் திசையில் மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *