குருநாகல் பகுதியிலுள்ள கல்கமுவ பலுகடவல ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இன்று (13) மதியம் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், ஏரியில் நீராடச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலம் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *