
குடும்ப தகராறு காரணமாக கணவர் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உயிரிழந்துள்ளார். மெதகம பொலிஸ் பிரிவின் பலகசர பகுதியில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பலகசர சாலைக்கு அருகில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டு காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் மெகதம பகுதியில், மக்கந்தவின்னவில் வசித்து வந்த 38 வயதுடைய பெண். விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது உள்ளூர் துப்பாக்கியால் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் மெதகம மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் கொலைக்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்ய மேதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.