க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இந்த வருடம் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 185 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், 2 இலட்சத்து 53 ஆயிரத்து 390 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79 ஆயிரத்து 795 தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் 319 ஒருங்கிணைப்பு நிலையங்களின் ஆதரவுடன் மொத்தம் 2,312 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பரீட்சை மோசடிகளை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *