
ஹோமாகம, பனாகொட, பெலதாகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடொன்றின் மீது இன்று (18) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இரண்டு தோட்டா உறைகள் மற்றும் ஒரு தோட்டாவும் வீட்டின் முன் சாலையில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வியாபாரியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டின் உரிமையாளர் மேலும் பல போதைப்பொருள் வியாபாரிகளிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக மெகொட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.