கொழும்பு (Colombo)-கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தீ விபத்தானது இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியிலுள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு, மூன்று தீயணைப்பு வாகனங்கள் தற்போது தீயணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *