
துருக்கியில் இன்று மதியம் 3.19 மணியளவில் ஏற்பட்ட 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.