உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள், இன்று (06) மாலை 4.00 மணி வரை, கடிதங்களை விநியோகிக்கும் தபால் அலுவலகம் அல்லது உபதபால் அலுவலகத்தில் அவற்றைப் பெறலாம் என பிரதி தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்தார். வாக்காளர்கள் இன்றும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்திற்குச் சென்று, தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து அவற்றைப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த முறை 339 உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை 17 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை தபால் மூலம் விநியோகிக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் சுமார் 97 சதவீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக உப தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *