நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவிற்குள் செல்லும் பல முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹட்டன்-நுவரெலியா வீதிமுதல் நானுஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலும், நுவரெலியா-பதுளை வீதிமுதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா-கம்பொல பம்பரகல வரையிலும் தற்போது அடர்ந்த மூடுபனி காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மூடுபனி காலங்களில் வாகன சாரதிகள் எச்சரிக்கையாகவும் , மெதுவாகவும் வாகனங்களை ஓட்டுவதோடு இந்த வீதிகளில் செல்லும்போது ஹெட்லைட்களை எரியவிடுமாறும் நுவரெலியா பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *