
நாட்டில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக 15 மாவட்டங்களில் மொத்தம் 21,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.மேல் மாகாணத்தில் மாத்திரம் 45 சதவீத டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்தமாக பதிவாகியுள்ள 21ஆயிரத்து 439 நோயாளர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கண்டி, காலி, மாத்தறை, திருகோணமலை, குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.சுகாதார அதிகார சபையினால் இரண்டு நாட்களில் 40ஆயிரத்து 108 இடங்கள் ஆய்வுசெய்யப்பட்டதாகவும், அவற்றில் 10ஆயிரத்து613 பிரதேசங்கள் அதிக நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், 1,407 பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 347 பகுதிகளுக்கு வழக்கு களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
பள்ளிகள், மத இடங்கள், கட்டுமான இடங்கள் போன்றவை வீடுகளை விட நுளம்புகள் பெருகும் இடங்களாக இருப்பதைக் குறிப்பிட்டு, பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யுமாறு வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.