
இல்ம் குர்ஆன் மத்ரஸாவில் சிறப்பாக நடந்து முடிந்த பரிசளிப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (2025-05-27) ஆம் திகதி இல்ம் குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா பேருவளை ஸாரா வரவேற்பு மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இதில், 7 மாணவ, மாணவிகள் மத்ரஸாவிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், இவ் விழாவை அலங்கரிக்க மத்ரஸா மாணவ, மாணவிகளால் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இவ்விழாவிற்கு கெளரவ அதிதியாக, அஷ்ஷெய்க். எஸ்.எம்.எம் பர்ஹத் ஹுஸைன் (நளீமி) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஏ.எம்.எம் ஸாஜித் (நளீமி-ஆர்), (இலங்கை திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கை இளங்கலை பட்டதாரி), மெளலவி. எஸ்.எச்.எம் இம்ரான் (ஹுமைதி) (பெருகமலை ஸாகிரீன் மத்ரஸா அதிபர்), மற்றும் ஷகீலா ஸுபைர் பாய்ஸ் (அம்பேபிடிய அஸாபிரூல் ஜன்னாஹ் குர்ஆன் மத்ரஸா அதிபர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், மத்ரஸா விலிருந்து விலகும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் மத்ரஸா லோகோ (logo) அச்சிடப்பட்ட பைகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.










































