தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களை செலுத்தும்போது அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை அடைய வாய்ப்பு உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *