கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (12) இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இறந்தவரது மனைவியின் சகோதரர் இவரை தாக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *