கந்தானை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கந்தானையைச் சேர்ந்த ரஞ்சி என அழைக்கப்படும் ரஞ்சித் குமார என்பவரின் வீட்டை குறிவைத்து இந்த ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் குறித்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் டுபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் துப்பாக்கி வைத்திருந்தமை, ஹெரோயின் கடத்தல் மற்றும் மாடு திருடுதல் ஆகிய குற்றங்களுக்காக சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவரென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *