ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை சற்றுமுன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (16) காலை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதையடுத்து, இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பேச்சுவார்த்தை நிகழ்த்தினர்.

மேலும், மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, ஜனாதிபதி பீகாரில் உள்ள புத்த கயாவுக்குச் செல்ல உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *