வாரியபொல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிப்பதற்குச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறதுஇந்த சம்பவம் நேற்று (25) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குவாரியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் பிரதேசவாசிகள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுவனுக்கு 13 வயது எனவும், தற்போது சிகிச்சை பெற்று வருபவருக்கு 16 வயது எனவும், தெரிவிக்கப்படுகிறதுஇறந்த சிறுவனின் சடலம் வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *